கோவை பீளமேடு அருகே இளைஞரை கத்தியால் குத்திய வடமாநில முதியவர் கைது!

கோவை - அவிநாசி சாலையில் விமான நிலையம் அருகே கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் ஒரிசாவை சேர்ந்த பிராவாட் மாலிக் (28) என்பவரை லாஜ்ரூஷ் டொப்போ (70) என்ற முதியவர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கோவை: கோவை அருகே செல்போன் காணாமல் போனதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வடமாநில இளைஞரை முதியவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரிசா மாநிலம் கொன்டரப்பரா பகுதியை சேர்ந்த மோகன் மாலிக் என்பவரது மகன் பிராவாட் மாலிக் (28). இவர் கோவை - அவிநாசி சாலையில் விமான நிலையம் அருகே கட்டப்பட்டு வரும் தனியார் கண் மருத்துவமனை கட்டட வேலைக்காக அதே பகுதியில் சக ஒடிசா தொழிலாளர்களுடன் தங்கி வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் பிராவாட் மாலிக் அறையில் தங்கிருக்கும் லாஜ்ரூஷ் டொப்போ (70) என்பவரது செல்போன் மாயமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறையில் இருந்த பிராவாட் மாலிக்கிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த லாஜ்ரூஷ் டொப்போ அங்கிருந்த கத்தியை எடுத்து பிராவாட் மாலிக் வயிற்றில் குத்தியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை சக தொழிலாளிகள் மீட்டு அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த பீளமேடு போலீசார் இளைஞரை கத்தியால் குத்திய லாஜ்ரூஷ் டொப்போவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம் வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...