சிறுமுகை அருகே கார் மரத்தில் மோதி விபத்து - வாலிபர் பலி

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ்(35) என்பவர் தனது மனைவி மற்றும் மகன்கள் உள்பட 5 பேருடன் உதகைக்கு சுற்றுலா சென்ற நிலையில், குமரன்குன்று அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதியதில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.


கோவை: சிறுமுகை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பாலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ் (35). இவர் தனது மனைவி ரஞ்சனி (30), மகன்கள் ஜோசப் ஆப்ரகாம் (8), கேசா சாரல் (6). ராஜேஷின் சகோதரி சித்ரா (27)ஆகியோர் கோடை விடுமுறையையொட்டி தங்களது காரில் நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு சுற்றுலா வர முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று மாலை 6 மணியளவில் பாலூரில் இருந்து காரில் ஊட்டிக்கு புறப்பட்டனர். காரை ஓட்டுனர் பூவேந்திரன் ஓட்டி வந்தார். கார் இன்று அதிகாலை 4.30 மணியளவில் கோவை மாவட்டம் சிறுமுகை அடுத்த குமரன்குன்று அருகே வந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் காரின் முன் இருக்கையிலிருந்த ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஓட்டுனர் உள்பட அவரது குடும்பத்தினர் படுகாயம் அடைந்தனர். அப்போது, அந்த வழியாக சென்றவர்கள் உடனடியாக அவர்களை மீட்டு, சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியை மேற்கொண்ட சிறுமுகை போலீசார், ராஜேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகாலை நேரத்தில் சுற்றுலா சென்ற கார் மரத்தில் மோதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...