சேவூர் அரசுப் பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் வழங்க பணம் வசூல் - வைரலாகும் வீடியோ

திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேவூர் அரசு மேல்நிலை பள்ளியில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க ஆசிரியர்கள் கட்டாய வசூலில் ஈடுபட்டு வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



திருப்பூர்: சேவூர் அரசு பள்ளியில் +2 மாணவ மாணவிகளுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்க பணம் வசூலிக்கப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியத்திற்கு உட்பட்ட சேவூரில் ஊராட்சியில் இயங்கி வரும் சேவூர் அரசு மேல்நிலை பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், 2022 - 2023 கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ - மாணவிகளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்ச்சி முடிவுகள் வெளியானது.

இதனிடையே தேர்ச்சியடைந்த மாணவ-மாணவிகளுக்கு நேற்று முதல் சேவூர் அரசுப் பள்ளி வளாகத்தில் நன்னடத்தைச் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது.



மாற்றுச் சான்றிதழ் பெறுவதற்கு பெற்றோருடன் வந்திருந்த மாணவ-மாணவிகளிடம் சான்றிதழ் வழங்க தலா ரூ.100 வீதம் கட்டாய வசூல் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அதே போல் வசூல் செய்த பணத்திற்கு எந்தவித ரசிதும் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆசிரியர்களின் இந்த வசூல் வேட்டை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...