சர்வதேச யோகா போட்டியில் அசத்திய மாணவர்கள் - கோவை ஆட்சியரிடம் வாழ்த்து பெற்றனர்!

நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச அளவிலான யோகா போட்டியில் இந்தியாவின் சார்பில் கோவையை சேர்ந்த இனியா, ராகவி, கோகுல், கிருஷிகா, சிவபாலன், விஷ்ணு பிரியா, சம்ருத், ஹரித் கான், ஹர்ஷித், சபரி சரண், ரித்திகாஸ்ரீ ஆகியோர் பங்கேற்று தங்கம் வென்று அசத்திய நிலையில் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.


கோவை: சர்வதேச யோகா போட்டியில் தங்கம் வென்ற மாணவ, மாணவிகள் கோவை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

நேபாளத்தில் கடந்த 7, 8, 9 ஆகிய தேதிகளில் சர்வதேச அளவிலான யோகா போட்டிகள் நடைபெற்றது. இதில் இந்தியா, நேபாளம், சீனா, மலாய், திபெத் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பங்கேற்றனர்.

இந்தியாவின் சார்பில் பங்கேற்ற கோவையைச் சேர்ந்த இனியா, ராகவி, கோகுல், கிருஷிகா, சிவபாலன், விஷ்ணு பிரியா, சம்ருத், ஹரித் கான், ஹர்ஷித், சபரி சரண், ரித்திகாஸ்ரீ ஆகியோர் தனி நபர் யோகா போட்டியில் தங்கம் வென்று அசத்தினர்.



இந்நிலையில் பதக்கங்களை வென்று கோவை திரும்பிய மாணவ, மாணவிகள், இன்றைய தினம் கோவை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, தாங்கள் பெற்ற பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

Newsletter

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....