நொய்யல் ஆற்றில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க கோரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் மனு!

நொய்யல் ஆற்றில் மருத்துவக் கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டுவதை தடுத்து நிறுத்தி நொய்யல் ஆற்றை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.


கோவை: நொய்யல் ஆற்றில் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டுவதை தடுக்க கோரி நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நொய்யல் ஆற்றில் சில தினங்களுக்கு முன்பு தொழிற்சாலை ரசாயன கழிவுகள் கலந்ததால் நுரைத் ததும்பி ஓடும் காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து நொய்யல் ஆற்றை பாதுகாக்க வேண்டும் என பல்வேறு பொதுமக்கள் விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனிடையே மாவட்ட ஆட்சியரும் அப்பகுதியில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்நிலையில் நொய்யல் ஆற்றில் மருத்துவமனை கழிவுகள், தொழிற்சாலை கழிவுகள், வீட்டு கழிவுகள் அனைத்தும் கலக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் நொய்யல் ஆறு மாசடைந்து விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

எனவே இவற்றைத் தடுத்து நிறுத்தி இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நொய்யல் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருஞானசம்பந்தம், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

மேலும் நொய்யல் ஆற்றின் நீரை சுத்தப்படுத்தி நொய்யல் ஆற்றை பாதுகாக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...