கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் - போலீசார் தீவிர சோதனை!

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதிகப்படியான மக்கள் கூட்டம் காணப்படும் என்பதால் போலீசார் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்களை குறைதீர்ப்பு நாள் கூட்டத்தை முன்னிட்டு போலீசார் தீவிர சோதனைக்கு பிறகே பொதுமக்களை அனுமதித்தனர்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வழக்கமாக திங்கட்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் பல்வேறு மக்கள் அவர்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக வழங்குவர். கோரிக்கை மனுக்களை அளிக்க வரும் பொது மக்களில் சிலர், அல்லது அரசியல் கட்சிகள் அமைப்புகளில் சேர்ந்த சிலர் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டங்களையும் முன்னெடுப்பர்.

எனவே மக்கள் குறை தீர்ப்பு நாளன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகப்படியான மக்கள் கூட்டம் காணப்படும். இதனால் போலீசாரும் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு பொதுமக்களின் உடமைகளை சோதனை செய்த பின்னரே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் பொதுமக்களை அனுமதிப்பர்.

சமீப காலங்களாக மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்திற்கு வரும் பொது மக்களில் சிலர் திடீரென மண்ணெண்ணெய், பெட்ரோல் உள்ளிட்டவற்றை ஊற்றிக் கொண்டு தீக்குளித்து தற்கொலை முயற்சிக்கு முயல்கின்றனர். இவ்வாறான செயல்களில் ஈடுபடும் பலரும் தண்ணீர் பாட்டில்களில் நீரைக் கொண்டு வருவது போல் மண்ணெண்ணெய் பெட்ரோல் உள்ளிட்டவற்றை எடுத்து வந்து இதுபோன்று சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.

எனவே ஒவ்வொரு முறையும் பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்கள் மிகுந்த முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தயார் நிலையில் இருந்து வருகின்றனர்.



அதன்படி இன்றைய தினம் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு முகாம்களிலும் பொதுமக்கள் தீக்குளிப்பு போன்ற அசம்பாவித செயல்களில் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்யும் பொருட்டு உடமைகள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதி வழங்கப்படுகிறது.

மேலும் பொதுமக்கள் எடுத்து வரும் தண்ணீர் பாட்டில்களும் சோதனை செய்யப்படுகிறது. தண்ணீர் பாட்டிலில் இருப்பதை குடித்து பார்த்த பின்னரே காவல் துறையினர் பொதுமக்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதி வழங்குகின்றனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...