கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி - கோவையில் உற்சாக கொண்டாட்டம்!

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து கோவை கவுண்டம்பாளையம் அடுத்த சுப்ரமணியம்பாளையம் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.



கோவை: கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியதையடுத்து கோவை சுப்பிரமணியம் பாளையம் பகுதியில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிந்த நிலையில் இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சி 130க்கும் மேற்பட்ட தொகுதிகளை வென்று தனிப்பெரும்பான்மையடன் ஆட்சி அமைக்க உள்ளது.

இதையடுத்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசுகளை வெடித்து இனிப்புகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அடுத்த சுப்பிரமணியம்பாளையம் மாநகராட்சி 15 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் மாமன்ற உறுப்பினர் சாந்தாமணி பச்சைமுத்து தலைமையில் மாநில பொதுச் செயலாளர் பச்சைமுத்து முன்னிலையில் பட்டாசுகளை வெடித்தும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.



இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஷேக் அப்துல் காதர், சர்க்கிள் தலைவர் சின்னு ராமகிருஷ்ணன், வார்டு தலைவர் செந்தில்குமார், சிங்காரவேலு, சுந்தரம், சதீஷ்குமார், வி.சி.எஸ்.மணி, எஸ்.ஏ.நடராஜ், பழனிச்சாமி, ரங்கசாமி, கோபால் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு காங்கிரஸ் வாழ்க என கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து இதுகுறித்து அவர்கள் பேசுகையில், வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்றார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...