நான்கு சக்கர வாகனம் வாங்கியதில் மோசடி - போத்தனூர் போலீசில் பாதிக்கப்பட்டவர் புகார்!

கோவை எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரிடம் நான்கு சக்கர வாகனத்தை வாங்கிவிட்டு, அதற்கான ரூ.6 லட்சம் பணத்தை கொடுக்காமல் மோசடி செய்த தேனியைச் சேர்ந்த சுரேஷ் மீது போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


கோவை மதுக்கரை ரோடு எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் நாச்சிமுத்து.

இவரது மகன் ரமேஷ்குமார் (42). இவர் பிரின்டிங் பிரஸ் நடத்தி வருகிறார். கடந்த ஆண்டு தனது நான்கு சக்கர வாகனத்தை தேனி மாவட்டம் போடிநாயக்கனூரை சேர்ந்த ராஜா மகன் சுரேஷ் (வயது45) என்பவருக்கு விற்பனை செய்ய ரமேஷ்குமார் பேசியுள்ளார்.

இதையடுத்து ,கோவை வந்த சுரேஷ், எம்.ஜி.ஆர் நகரில் உள்ள ரமேஷ் குமாரின் வீட்டிற்கு வந்து ரூ.10 ஆயிரம் மட்டும் முன்பணமாக கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூ.6 லட்சம் பணத்தை ஏழு நாட்களுக்குள் கொடுப்பதாக கூறிவிட்டு நான்கு சக்கர வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளார்.

அதைத் தொடர்ந்து, அவர் பணத்தை தராமல் இருந்ததோடு, சுரேஷ் செல்போனில் அழைத்தபோதும் அதை எடுக்காமல் தவிர்த்து வந்தார்.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுரேஷ், போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் மோசடி குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...