கோவை வடக்கு,தெற்கு மண்டலங்களில் ரூ.1.92 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை தொடங்கி வைத்த மேயர்!

கோவை வடக்கு மற்றும்‌ தெற்கு மண்டலங்களில்‌  தார்சாலை, உயர்மட்ட பாலம்‌, தடுப்புவேலி‌, மின்‌ மயானத்தில்‌ மின்சடங்கு மண்டபம்‌ மற்றும்‌ கழிவறை கட்டுமான பணி என ரூ.1.92 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கான கட்டுமான பணிகளை மேயர் கல்பனா பூமிபூஜை செய்து துவங்கி வைத்தார்.


கோவை: கோவை மாவட்டத்தின் வடக்கு மற்றும் தெற்கு மண்டலங்களில் ரூ.1.92 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கான பணிகளை மேயர் கல்பனா தொடங்கி வைத்தார்.



கோவை‌ மாநகராட்சியின் தெற்கு மண்டலம் வார்டு எண்‌.94க்கு உட்பட்ட அன்னை இந்திரா நகா்‌, 2 மற்றும்‌ 3வது வீதியில்‌ தமிழ்நாடு நிலையான நகர்ப்புற சாலைகள்‌ மேம்பாட்டு திட்டம்‌ - 3(TURIP) கீழ்‌ ரூ.30 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 480 மீட்டர்‌ தொலைவிற்கு நடைபெற்று வரும்‌ தார்‌ சாலை அமைக்கும்‌ பணி,



வார்டு எண்‌.97க்கு உட்பட்ட பிள்ளையார்புரம்‌ சாலையில்‌ ரூ.62 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ உயர்மட்ட பாலம்‌ அமைத்தல்‌, கஸ்தூரி கார்டன்‌ எதிரில்‌ தடுப்புவேலி அமைக்கும்‌ பணிகள்‌,



வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.10க்கு உட்பட்ட சரவணம்பட்டி பகுதியில்‌ சி.ஆர்‌.ஐ.பம்ப்ஸ்‌ நிறுவனத்தின்‌ சார்பில்‌ நமக்கு நாமே திட்டத்தின் கீழ்‌ ரூ.1 கோடி மதிப்பீட்டில்‌ மின்‌ மயானத்தில்‌ மின் சடங்குமண்டபம்‌ மற்றும்‌ கழிவறை கட்டுமான பணிகள்‌,

இவ்வாறு மொத்தமாக ரூ.1.92 கோடி மதிப்பீட்டிலான பணிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ பூமிபூஜை செய்து, தொடங்கி வைத்தார்‌.

Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....