கோவை லங்கா கார்னர் சுரங்கப்பாதையில் வெள்ளநீர் வெளியேற்றம்

கோவையில் பெய்த கனமழையால் லங்கா கார்னர் பகுதி சுரங்கப்பாதையில் தேங்கிய வெள்ளநீர் வெளியேற்றப்படுவதை மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பரவலாக நல்ல மழை பெய்துவருகிறது. அந்த வகையில், நேற்று பெய்த கனமழையால், லங்கா கார்னர்‌ பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில்‌ வெள்ளநீர் தேங்கியது.

இதனை, வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையர் பிரதாப்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌. அப்போது, உதவி ஆணையர்‌ மகேஷ்கனகராஜ்‌, உதவி பொறியாளர்‌ விமல்ராஜ்‌, சுகாதார அலுவலர்‌ குணசேகரன்‌, சுகாதார ஆய்வாளர்‌ தனபால்‌ ஆகியோர்‌ உடனிருந்தனர்.

இதேபோல், கோயம்புத்தூர்‌ மாநகராட்சி வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.19க்குட்பட்ட எம்‌.கே.பி. காலனி பகுதியில்‌ நேற்று இரவு பெய்த கன மழையில்‌ மரம்‌ ஒன்று பெயர்ந்து விழுந்தது.



இதனை, கோவை மாநகராட்சி மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, விழுந்த மரத்தை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்‌. அப்போது மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...