தமிழக அமைச்சரவையில் மாற்றம் - இலாக்காக்களை மாற்றி அமைத்து அறிவிப்பு வெளியிட்ட ஆளுநர் மாளிகை!

தமிழக அமைச்சரவையில் மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா இன்று புதிதாகப் தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்ட 5 அமைச்சர்களுக்கு இலாக்காக்களை மாற்றியமைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்து, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. கடந்த இரண்டாண்டு காலத்தில் அமைச்சரவையில் சிற்சில மாற்றங்கள் செய்யப்பட்டன.



அதன்படி, போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு அப்பதவிக்கு சிவசங்கர் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, உதயநிதி ஸ்டாலினுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி அளிக்கப்பட்டது.

இந்நிலையில், பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி எஸ்.நாசர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அன்றைய தினமே, மன்னார்குடி எம்.எல்.ஏவும், திமுகவின் பொருளாளருமான டி.ஆர்.பாலுவின் மகனுமான டி.ஆர்.பி.ராஜா புதிய அமைச்சராக அறிவிக்கப்பட்டார்.



இன்று காலை கிண்டி ராஜ்பவனில் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து, தமிழக அமைச்சரவையில் 5 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றியமைக்கப்பட்டு, அதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.

அதன்படி, புதியதாக பொறுப்பேற்ற அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதியமைச்சராக இருந்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகரானுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையும், நிதியமைச்சராக தங்கம் தென்னரசும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜூக்கு தற்போது பால்வளத்துறை வழங்கப்பட்டுள்ளது. செய்தித்துறை அமைச்சராக பதவி வகித்துவரும் அமைச்சர் மு.பெ.சாமிநாதனுக்கு, தமிழ்வளர்ச்சித்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கோரி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம், ஓய்வு வயது உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ...

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...