ஒ.பி.எஸ், டிடிவி சந்திப்பு என்பது கண் கெட்டபின் சூரியநமஸ்காரம் போன்றது..! - கோவை செல்வராஜ் விமர்சனம்

ஒரு மாதத்திற்கு 8 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கும் அண்ணாமலைக்கு திமுகவை பற்றியோ திமுக தலைவர் ஸ்டாலின் பற்றியோ பேச எந்த அருகதையும் இல்லை. பாஜகவிற்கு மாநில தலைவராக இருக்க அண்ணாமலைக்கு ஒரு தகுதியும் இல்லை என்று திமுகவின் செய்தி தொடர்பு துணை செயலாளர் கோவை செல்வராஜ் தெரிவித்தார்.



கோவை: கோவை தெற்கு மாவட்டம் நகர திமுக சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கட்சியின் செய்தி தொடர்பு துணை செயலாளர் கோவை செல்வராஜ் கலந்துகொண்டார்.



அப்போது அவர் பேசியதாவது:

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இரண்டு ஆண்டுகளில் இலவச பேருந்து பயணம், மாணவ மாணவிகளுக்கு சிற்றுண்டி வழங்கும் திட்டம், நகை கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. சொல்லாத பல திட்டங்களையும் தமிழக முதல்வர் செயல்படுத்தி வருகிறார்.

பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்தவரை நம்பி மட்டுமே இருக்கிறார். அவரும் அவர் மனைவியும் குழந்தைகளும் கொடுக்கும் உடை கூட அடுத்தவர் தந்துதான் அவர் பயன்படுத்தி வருகிறார். ஒரு மாதத்திற்கு 8 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கும் அண்ணாமலைக்கு திமுகவை பற்றியோ திமுக தலைவர் ஸ்டாலின் பற்றியோ பேச எந்த அருகதையும் இல்லை. பாஜகவிற்கு மாநில தலைவராக இருக்க அண்ணாமலைக்கு ஒரு தகுதியும் இல்லை.

இவ்வாறு அவர் பேசினார்.



பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓபிஎஸ் தினகரனை சந்தித்தது, சசிகலாவை சந்திப்பது இவையெல்லாம் கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் செய்வது போல் இருவரும் எல்லாவற்றையும் எல்லோரையும் இழந்து விட்டு சூரியநமஸ்காரம் செய்து கொண்டிருக்கிறார்கள். இது எந்த காலத்திலும் எடுபடாது.

சபரீஸ்வரனும் ஓபிஎஸ்-ம் சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்புதான். அது மூன்று நிமிடங்கள் சந்திப்பு. பிறகு அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. இதை இட்டுக்கட்டி சொல்வது கண்டிக்கத்தக்கது. ஜெயக்குமார் ஒரு மட்டமான அரசியல்வாதி. அரசியல் நாகரீகம் தெரியாதவர் போக்சோ ஜெயக்குமார் என்று அவர் அப்போது விமர்சித்தார்.

Newsletter

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...

அமராவதி அணையில் நீர்மட்டம் 51.45 அடியாக உயர்வு - திருமூர்த்தி அணையில் 379 கன அடி வரத்து

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 22ஆம் தேதி நிலவரப்படி 51.45 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அ...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்...

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...