கோவை அருகே மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதி விபத்து - இளைஞர் உயிரிழப்பு

கோவை ஈச்சனாரி அருகே இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மின்விளக்கு கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த முத்துச்செல்வம் என்ற தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


கோவை: தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மகன் முத்து செல்வம் (வயது26).

இவர் கோவை ஈச்சனாரி அருகே தனியாக அறை எடுத்து தங்கி மலுமிச்சம்பட்டியில் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், வழக்கம்போல் பணி முடிந்து இரவு 11.30 மணியளவில் தனது அறைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்போது, ஈச்சனாரி மேம்பாலத்தை கடந்து சென்றபோது, சாலையில் இருந்த வேகத்தடுப்பில் மோதாமல் இருக்க, வலது புறமாக அவர் தமது இரு சக்கர வாகனத்தை திருப்பியபோது, கட்டுப்பாட்டை இழந்த அந்த இரு சக்கர வாகனம் சாலை நடுவே இருந்த மின்விளக்கு கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் படுகாயமடைந்த முத்துச்செல்வத்தை, அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் மருத்துவமனை செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...