திருப்பூரில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டம்!

திருப்பூரில் குடிநீர் வசதிகள் உட்பட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என வலியுறுத்தி பட்டுக்கோட்டையார் நகர் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூரில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி பொதுமக்கள் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பட்டுக்கோட்டையார் நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் சார்பில், திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

பட்டுக்கோட்டையார் நகரின் 8 வீதிகளிலும் உள்ள குடிநீர் குழாய் பழுதாகியுள்ளன. புதிய குடிநீர் குழாய் பதித்து தர வேண்டும். 2 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். சாலைகளை புதிதாக செப்பனிட வேண்டும். வீதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். மாதம் ஒருமுறை மருத்துவ முகாம் நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.



அப்போது, மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்த மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்து குடிநீர் பற்றாக்குறை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மற்ற கோரிக்கைகள் படிப்படியாக சீரமைக்கப்படும் என உறுதியளித்தார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...