வால்பாறையில் குழந்தைகள் காப்பகம், கோயிலை சேதப்படுத்திய யானைகள்!

கோவை மாவட்டம் வால்பாறை அருகே குடியிருப்புப் பகுதியில் புகுந்த 4 காட்டு யானைகள், அங்கிருந்த குழந்தைகள் காப்பகம், ரேஷன் கடை, கோவில் ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தின. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும்படியும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை: வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் சில தினங்களாக யானைகளின் நடமாட்டம் காணப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு வால்பாறை அருகே பன்னிமேடு எஸ்டேட் பகுதியில் நான்கு காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தன.



அப்போது, அங்கிருந்த குழந்தைகள் காப்பகம், கோவில், நியாய விலை கடை, எஸ்டேட் பொருட்கள் வைக்கும் அறை ஆகியவற்றின் ஜன்னல், கதவு, சுவர், உள் இருந்த பொருட்கள் போன்றவற்றை உடைத்து சூறையாடின.



பின்னர் அந்த காட்டு யானைகள், எஸ்டேட் வாகனத்தின் மூலம் வனப் பகுதிக்குள் விரட்டப்பட்டன.



காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருவதால், அவை குடியிருப்பு பகுதிகளுக்குள் வராமல் வனத்துறையினர் தடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...

கோவை ரயில் நிலையம் அருகே 1.4 கிலோ கஞ்சாவுடன் பீகார் நபர் கைது.

கோவை மத்திய ரயில் நிலையம் அருகே விநாயகர் கோவில் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ரேஸ் கோர...

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...