கோவை அருகே சந்தனமரம் வெட்டிக்கடத்தல் - 7 பேரை கைது செய்த வனத்துறை!

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட கூடலூர் பகுதியில் சந்தன மர திருட்டில் ஈடுபட்ட 7 பேரை பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களுக்கு வனத்துறை சார்பில் ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகில் கூடலூர் கிராமத்தில் அரசு நிலத்தில், கட்டுமானம் ஏற்படுத்த, அங்கிருந்த பல மரங்களை வெட்டும்பொழுது,

அதில் இருந்த ஒரு சந்தன மரத்தையும் வெட்டி, அதன் அடித்துண்டை செதுக்கி, கடத்திச் சென்று விட்டதாக பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் தலைமையிலான வனத்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், மரங்களை வெட்டி கடத்திச் சென்ற 7 நபர்களை பிடித்து, கடத்திச் சென்ற 4 சந்தன மரத் துண்டுகளையும் கைப்பற்றினர்.

அவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு வனத்துறையினர், கோவை மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில், கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட முதல் இரு எதிரிகளுக்கு தலா ரூ.25,000/- வீதமும், வெட்டிக் கடத்தும் பணிக்கு உறுதுணையாக இருந்த மற்ற ஐந்து எதிரிகளுக்கு தலா ரூ.10,000/- வீதமும், ஆக மொத்தம் ரூ.1,00,000/- அபராதம் விதித்தனர்.

Newsletter

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...