கோவை மதுக்கரை அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை - இளைஞர் கைது!

கோவை மதுக்கரை அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்த சுந்தராபுரத்தை சேர்ந்த அஜித்(25) என்ற இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 1.1 கிலோ அளவிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மதுக்கரை பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் மதுக்கரை காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் மதுக்கரை அடுத்த சுந்தராபுரம் ரோடு மெகா சிட்டி அருகே சென்று சோதனை மேற்கொண்டனர்.



அப்போது கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்த கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த அயாஜி மகன் அஜித்(25) என்பவரை போலீசார், கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து 1.1 கிலோ அளவிலான கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் போதைப்பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டு, அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கையின் பேரில் கடந்த 01.01.2023 முதல் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 221 நபர்கள் மீது 173 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவர்களிடமிருந்து சுமார் 442.211 கிலோ எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Newsletter

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...

கோவை பூங்கா நகரில் நீர்த்தேக்கம் மற்றும் கழிவுநீர் உந்து நிலையத்தை ஆய்வு செய்த மேயர்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு 23ல் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் கழிவுநீர் உந்து ந...

கிணத்துக்கடவில் 6 கல்குவாரிகளை தற்காலிகமாக மூட ஆட்சியர் உத்தரவு

பொள்ளாச்சியை அடுத்த கிணத்துக்கிடவு அருகே செயல்பட்டு வந்த ஆறு கல்குவாரிகளை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ள...

கோவையில் ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை மாவட்டத்தில் உயிர் காப்பாற்றும் வீரச்செயல்களுக்கான ஜீவன் ரக்‌ஷா பதக்க விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன....

கோவையில் 2027 பத்ம விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் 2027 குடியரசுதினத்தன்று வழங்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் ஜூலை 31, 2026க்குள் சமர்பிக்க வேண்டும்...

மகளின் புகைப்படங்களை காட்டி மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததாக எஸ்.பி.யிடம் பெற்றோர் புகார்

தனது 17 வயது மகளின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.8.65 லட்சம் பறித்ததுடன், தொடர்ந்து குடும்ப நபர்களுக...