கோவையில் வளர்ப்பு நாய் மீது கொடூர தாக்குதல் - மர்ம நபர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

கோவை மாவட்டம் காளப்பட்டி அருகே பாலதண்டாயுதபாணி என்பவருக்கு சொந்தமான வளர்ப்பு நாயை, கற்களாலும், கட்டையாலும் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச்சென்ற மர்ம நபர் மீது, விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை காளப்பட்டி அருகே வளர்ப்பு நாயை தாக்கி விட்டு தப்பிச் சென்ற மர்மநபர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் காளப்பட்டி பாலாஜி நகர் பகுதியில் சேர்ந்தவர் பாலதண்டாயுதபாணி (48). இவர் தனது வீட்டில் வளர்ப்பு நாய் ஒன்றை வைத்து பராமரித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் பாலதண்டாயுதபாணி வீட்டு வளாகத்திற்குள் புகுந்து அவரது வளர்ப்பு நாயை கட்டை மற்றும் கல்லால் கடுமையாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

நாயின் அலறல் சத்தம் கேட்டு வந்து பார்த்தபோது மர்ம நபர் நாயை தாக்கி விட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து பாலதண்டாயுதபாணி பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகார் அடிப்படையில் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம் உள்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் நாயை கொடூரமாக தாக்கிய மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...