திடீர் கனமழையால் கவுண்டம்பாளையம் அருகே மேம்பாலத்தின் அடியில் சிக்கிய மினி பேருந்து - பரபரப்பு!

கோவை மாநகரில் இன்று மாலை பெய்த திடீர் கனமழையின் காரணமாக கவுண்டம்பாளையம் அருகே மேம்பாலத்திற்கு அடியில் மழைநீர் தேங்கி நின்ற நிலையில் அவ்வழியாக சென்ற மினி பேருந்து ஒன்று அங்கேயே சிக்கிக் கொண்டது. மழை நீர் அகற்றப்பட்ட பின்னரே பேருந்து மீட்கப்படும் என அதிகாரிகள் தகவல்.


கோவை: கவுண்டம்பாளையம் அருகே திடீர் கனமழையின் காரணமாக மேம்பாலத்திற்கு அடியில் தேங்கி நின்ற மழைநீரில் மினி பேருந்து ஒன்று சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாநகரில் உக்கடம், கவுண்டம்பாளையம், காந்திபுரம் ஆகிய பகுதிகளில் இன்று மாலை 5 மணியளவில் பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

சில இடங்களில் மழை நீர் தேங்கி நின்றதால் அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.



இந்த நிலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மேம்பாலத்தின் கீழ் மழை நீர் தேங்கி நின்றதால் அவ்வழியாக வந்த மினி பேருந்து ஒன்று கவுண்டம்பாளையம் மேம்பாலத்திற்கு அடியில் சிக்கிக் கொண்டது.

தொடர்ந்து மழை பெய்து வந்ததால், பேருந்து ஓட்டுநர் வெளியே வந்தார்.



முன்னதாக மழையின் வேகம் அதிகரித்தால் உடனடியாக போக்குவரத்து நிறுத்தும் பணிகள் நடைபெற்றது. இதனிடையே வாகனத்தை எடுத்துச் செல்ல முயன்றும் மீட்க முடியாததால், மழை நீர் அகற்றப்பட்ட பிறகு மினி பேருந்தை வெளியே எடுக்கும் பணிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...