கோவையில் 17 வயது மகளுக்கு 6 ஆண்டுகளாக பாலியல் தொல்லை - வளர்ப்பு தந்தை போக்சோவில் கைது!

கோவையில் 2வது திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர் தனது 17 வயது மகளுடன் வசித்து வந்த நிலையில், கணவன் - மனைவிக்குள் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்த நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்ததை தொடர்ந்து, புகாரின் பேரில் வளர்ப்பு தந்தை போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: கோவையில் 17 வயது சிறுமிக்கு கடந்த 6 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த வளர்ப்பு தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவையை சேர்ந்த பெண் ஒருவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு, மகளுடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் பெண்ணுக்கும், 2வது கணவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து சென்றுள்ளனர்.

அப்போது அவரது 17 வயது மகள் வளர்ப்பு தந்தை கடந்த 6 ஆண்டுகளாக பாலியல் தொல்லை அளித்ததோடு, வெளியே சொல்ல கூடாது என மிரட்டியதாக தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த வளர்ப்பு தந்தை மீது சிறுமியின் தாய் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் வளர்ப்பு தந்தையை போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலம் மீட்பு; 3 மாடி வணிக வளாகம் இடிப்பு - மாநகராட்சி நடவடிக்கை..!

கோவை ஆவாரம்பாளையத்தில் ₹3 கோடி மதிப்பிலான OSR நிலத்தை மீட்கும் நடவடிக்கையாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்ப...

கோவை TNAU மாணவி உயிரிழப்பு: மரணத்தில் சந்தேகம் என குடும்பத்தார்; போலீசார் தீவிர விசாரணை

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்(TNAU) பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வந்த மாணவி விடுதி குளியலறையில் உயிரிழந்...

கோவையில் ஒரே நாளில் 1,022 தெருநாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து ஜனவரி 11, 2026 அன்று அரசு மருத்துவமனை, நீதிமன்ற வளா...

கோவையில் ஆர்எஸ்.புரம் ஹாக்கி மைதானம் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, R.S.புரம் ஹாக்கி மைதானம், நேரு உள் விளையாட்டு அரங்கம், கிருஷ்ணம்பதி குளம்...

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் 2146 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

கோவை கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 2146 மாணவர்களுக்கு பட்டங்களும், 18 ஆய்வாள...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் 30 லட்சம் ரூபாய் நிதியுதவி

கோவை வட்டமலைப்பாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 2001 பட்டதாரிகளின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்...