மதம் மாறிய பட்டியலினத்தவருக்கு சலுகைகள் அளிப்பதில் மறுபரிசீலனை அவசியம்..! - காடேஸ்வரா சுப்பிரமணியன் வலியுறுத்தல்

தமிழகத்தில் கிறிஸ்துவ மதம் மாறிய பட்டியல் இனத்தவர்களுக்கும் சலுகைகள் அளித்தால், பட்டியல் இனத்தவர் தங்களது உரிமைகளை இழக்க நேரிடும். இதுகுறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று, தாராபுரத்தில் இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பாஜகவினருக்கும் இந்து மக்கள் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் பிரச்சினை எழுந்தது.

இது பற்றி விசாரித்து அறிந்து கொள்ளவும் இந்து முன்னணிக்கும் நடந்த பிரச்சனைக்கும் தொடர்பு இல்லை என்ற விளக்கம் அளிக்கவும் இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தாராபுரம் வந்தார்.



பின்னர் தாராபுரம் இந்து முன்னணி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியதாவது:

இந்து மக்கள் கட்சிக்கும் பாஜகவுக்கும் ஏற்பட்ட பிரச்சனை. இந்து மக்கள் கட்சிக்கும் பாஜகவுக்கும் அரசியல் ரீதியாக சம்பந்தம் இல்லை. அது அர்ஜுன் சம்பத் என்ற தனி ஒருவரது கட்சி. இதே வேளையில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் பாஜகவுக்கும் இந்து முன்னணி தொண்டர்களுக்கும் இடையே கோஷ்டி மோதல் என்பது போன்ற தவறான செய்தியை கூறியிருக்கிறார்கள்.

அதே வேளையில் மற்ற செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகளில் சரியான தகவலை கூறி இருக்கிறார்கள். எனவே தவறான தகவலை வெளியிட்ட அந்த தனியார் தொலைக்காட்சி மறுப்பு தெரிவித்து மன்னிப்பு கேட்க வேண்டும்.

மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கு பட்டியல் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளைபோல் வழங்கலாம் என அரசு அறிவித்துள்ளது. இதில் இந்து முன்னணி என்ன சொல்கிறது என்றால், பட்டியல் இன மக்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் பறிபோகின்றது. இதை அந்த கூட்டணியில் இருக்கின்ற பட்டியல் இனத்திற்காக போராடக்கூடிய திருமாவளவன் கட்சி கண்டிக்க வேண்டும்.

மதம் மாறியவர்கள் எப்படி பட்டியல் இனத்துடன் வருவார்கள் ? இங்கு தான் தீண்டாமை உள்ளே வருகிறது. மதம் மாறிய அவர்களை உயர்த்த வேண்டும் என்று இட ஒதுக்கீடு இருக்கிறது. பட்டியல் இன மக்களுக்கு வருகின்ற சலுகை பறிபோகின்றது. அதை தடுக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.

மதமாற்றம் பல்வேறு இடங்களில் நடந்து கொண்டு தான் உள்ளது. இதை அரசாங்கமே சொல்கின்றது. சபாநாயகர் மற்றும் முதலமைச்சர் சொல்லுகின்றனர் நாம் அனைவரும் ஒரு நாட்டினுடைய மக்கள். இதை நாம் தமிழரும், திராவிட கழகத்தைச் சேர்ந்தவர்களும் பிரிக்கிறார்கள்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அதிகம் பேர் வெளிநாட்டில் வேலை செய்கின்றனர். இவர்களைபோல் அங்கே இருக்கும் தமிழர்களுக்கு இடையூறு செய்தால் என்ன செய்வார்கள்? எப்படி ஆதரவு கொடுப்பார்கள்? நாங்கள் திருப்பூரில்கூட அதே போன்று வரும்போது வட மாநில தொழிலாளர்களுக்கு தமிழக தொழிலாளர்களையும் ஒருங்கிணைத்து உங்களுக்கு பாதுகாப்பு நாங்கள் தருகிறோம். நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.

இந்து முன்னணி அனைத்து மாநிலத்திலும் உள்ளது. தமிழர்களுக்கும் பாதுகாப்பு பாதுகாப்பு வழங்க வேண்டும். திராவிட கழகத்தை சேர்ந்தவர்கள் ஒரு ஜாதி கலவரத்தை தூண்ட வேண்டும் என்பதற்காக மாநில கலவரத்தை தூண்ட வேண்டும் என்பதற்காகவும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

பாராளுமன்றத் தேர்தலில், இந்துக்களுக்கு யார் ஆதரவாக செயல்படுகிறார்களோ எங்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுக்கு ஆதரவு கொடுப்போம்.

அதிமுக, பாஜகவும் இரண்டும் ஒன்றாக அறிக்கை வெளியிட்டுள்ளார்கள். எடப்பாடி பழனிச்சாமிக்கும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. சுமூகமாகதான் உள்ளது. கூட்டணி தொடரும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...

PMBJP திட்டத்தின் கீழ் கோவைக்கு ரயிலில் வந்த 1,300 டன் மானிய உர மூட்டைகள்

பிரதம மந்திரி பாரதிய ஜன உர்வராக் பரியோஜனா (PMBJP) திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பிலான சுமார் 1,300 டன் மானிய யூரியா உ...