தாராபுரம் அருகே கோயிலில் தேனீக்கள் தாக்குதல் - 4 வயது சிறுமி உட்பட 15 பேர் பாதிப்பு!

தாராபுரம் அருகே கோவிலுக்கு சென்ற பொதுமக்களை தேனீக்கள் கொட்டியதில் 4 வயது சிறுமி உட்பட 15 பேர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்ட அனைவரும் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தேர்பட்டி கிராமத்தில் பழமை வாய்ந்த காட்டம்மன் திருக்கோவில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சாமி கும்பிடச்செல்வது வழக்கம். அந்தவகையில், தேர் பட்டி பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் காட்டம்மன் கோவிலுக்கு நேற்றுச் சென்றனர்.



பக்தர்கள் பொங்கல் வைத்து கொண்டிருக்கும்போது, எழுந்த புகை காரணமாக அங்கிருந்த தேனீக்கள் பக்தர்களை கொட்டத் தொடங்கியது. இதில் தேர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சிறுமி மகா (4),சுந்தரபாண்டி (11), பிரியங்கா (21), சுகன்யா (28), பிரியா (32), கவிதா (33), சக்திவேல் (40), கன்னியாத்தாள் (58),வள்ளியம்மாள் (75) உட்பட 15 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து, அவர்கள் அனைவரும் உடனடியாக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்செல்லப்பட்டனர். இரண்டு பேர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற பக்தர்களை தேனீக்கள் கொட்டிய சம்பவம் தாராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...