கோவை அருகே இறந்த நிலையில் பெண் யானை மீட்பு - இறப்பிற்கான காரணத்தை அறிய இன்று உடற்கூறாய்வு!

கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பாலமலை அடிவாரத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அடர்ந்த வனப் பகுதியில், பெண் யானை இறந்து நிலையில் மீட்கப்பட்டது. அந்த யானையின் உடலை கால்நடை மருத்துவர்கள் இன்று உடற்கூறாய்வு செய்கின்றனர்.


கோவை: கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகம், பெரியநாயக்கன்பாளையம் பிரிவு, மாங்குழி சுற்று, பெருக்குபதி சராகம், தடாகம் காப்புக்காட்டிற்குள்,

பாலமலை அடிவாரத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அடர்ந்த வனப் பகுதியில், பெரியநாயக்கன்பாளையம் பிரிவு வனவர் தலைமையிலான களப்பணியாளர்களின் வழக்கமான ரோந்து பணியின்போது வயது வந்த ஒரு பெண் யானை இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், இறந்து கிடந்த யானையை பரிசோதித்தனர்.

அதில் யானையின் உடலில் காயங்களோ, வேறு அசாதாரண தடயங்களோ ஏதுமில்லை என தெரியவந்துள்ளது.

யானை இறப்பிற்கான காரணத்தை கண்டறிய கால்நடை மருத்துவர்கள் இன்று காலை உடற்கூறு ஆய்வு செய்யவுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...