தாராபுரம் அருகே இருதரப்பினர் இடையே மோதல் - வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை

தாராபுரம் அருகே புதுப்பை கிராமத்தில் உள்ள அங்காளபரமேஸ்வரி கோவிலில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றது. நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை இரு தரப்பினரும் பழைய நடைமுறையை தொடருங்கள் என வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.



திருப்பூர்: தாராபுரம் அருகே கோவிலில் ஏற்பட்ட மோதல் காரணமாக வட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள புதுப்பை கிராமத்தில் பழமையான அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை மாதம் வெள்ளிக்கிழமை மற்றும் ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபா ஆராதனைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புதுப்பை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் குலத்தவர்கள் அவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக பூஜை செய்யாமல் வந்தனர். இந்நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு ஊர் பொதுமக்கள் மற்றும் குலத்தவர்கள் சார்பில் வருடம் தோறும் சிறப்பு பூஜையில் ஈடுபட்டு வந்தனர்.



இதனை பொறுத்துக் கொள்ளாத மூன்று குலத்தவர்கள் வேண்டுமென்றே பூஜையை நிறுத்துவதற்காக வழக்கு தொடர்ந்தனர். அப்போது இரு தரப்பினரும் கோவிலில் தரிசனம் செய்து கொண்டு அன்னதானம் நடைபெறும் போது கோவில் மண்டபத்தை பயன்படுத்தாமல் தனியாருக்கு சொந்தமான இடத்தில் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மற்றொரு தரப்பினர் வேண்டுமென்றே பிரச்சனை செய்து வருவதாக குலத்தவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. நடைபெற்ற பேச்சு வார்த்தையில் நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை இரு தரப்பினரும் பழைய நடைமுறையை தொடருங்கள் என வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...