வால்பாறையில் சத்துணவு சாப்பிட்ட 21மாணவர்களுக்கு தலைவலி, வாந்தி - மருத்துவமனையில் அனுமதி

வால்பாறை அரசு தொடக்கப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 21 மாணவர்களுக்கு தலைவலி, வாந்தி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: வால்பாறையில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 43 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களுக்கு வழக்கம் போல் மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அனைவரும் சாப்பிட்டு உள்ளனர். இதை தொடர்ந்து மாணவர்களுக்கு சத்து மாத்திரையும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதை சாப்பிட்ட ஒரு சில மாணவர்களுக்கு மாலை 3 மணி அளவில் லேசான தலைவலியும், வாந்தியும் ஏற்பட்டு உள்ளது.



இதை தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் ஆட்டோ மற்றும் தனியார் வாகனம் மூலம் 21 குழந்தைகளை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



மேலும் சில தினங்களாக இந்த பகுதியில் மழை பெய்து வருவதால் குடிநீர் கருப்பு நிறத்தில் வருவதாகவும், அதை குடித்த மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு இருக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...