பொள்ளாச்சி அருகே தொடர் செயின் பறிப்பு - 13 சவரன் நகையுடன் தூத்துக்குடிப் பெண் கைது!

பொள்ளாச்சி அருகே கோட்டூர் பகுதியில் 3 பெண்களிடம் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கௌதமி என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து 13 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.



பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்துள்ள கோட்டூர் பகுதியில் கடந்த மாதம் கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது, சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி சிலர் நகை பறிப்பில் ஈடுபட்டனர். கோட்டூர் பகுதியை சேர்ந்த பழனியம்மாள் சிவபாக்கியம் மற்றும் துளசி அம்மாள் ஆகிய மூன்று பெண்களிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர் 13 சவரன் நகையை கொள்ளை அடித்து சென்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இசக்கி என்பவரது மனைவி கௌதமி (வயது 36) என்பவர் இந்த தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

தொடர் விசாரணையில், கௌதமி, மேலும் பல திருட்டு குற்றங்களில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட கௌதமிடமிருந்து 13 சவரன் நகையை பறிமுதல் செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...