உடுமலை பேருந்து நிலையத்தில் சேதமடைந்த நடைபாதை - உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

உடுமலை மத்திய பேருந்து நிலையத்திற்கு பொதுமக்கள் வந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட கைப்பிடியுடன் கூடிய நடைபாதையின் தரைப்பகுதி மற்றும் கைப்பிடி சேதமடைந்து பயன்படுத்த முடியாத சூழலில் உள்ளதால் உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையின் மையப்பகுதியில் மத்திய பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து சுற்றுப்புற கிராமங்கள், மற்றும் வெளி மாவட்டங்களுக்கு நாள்தோறும் ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

அதுமட்டுமின்றி வெளி மாநிலத்தில் இருந்து வருகை தருகின்ற பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்கின்றது.

இதன் காரணமாக காலை முதல் மாலை வரையிலும் பேருந்து நிலையம் பரபரப்புடன் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொதுமக்கள் பேருந்து நிலையத்திற்குள் பாதுகாப்பாக வந்து செல்வதற்கு ஏதுவாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபாதை அமைக்கப்பட்டது.



பேருந்து நிலையத்தின் நுழைவு பகுதியில் இருந்து எல்லை முடியும் வரையிலும் பக்கவாட்டு கைப்பிடியுடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட்டது. சிறிது காலம் பயன்பாட்டில் இருந்து வந்த நடைபாதை முறையான பராமரிப்பு இல்லாமல் அடித்தளம் மற்றும் பக்கவாட்டு கைப்பிடியானது பல மாதங்களாகவே சேதமடைந்து காணப்படுகிறது.



மேலும் நடைபாதை அமைக்கப்பட்டதற்கான நோக்கமும் அதற்கான நிதியும் வீணாகி வருகிறது. பொதுமக்களுக்காக தொடங்கப்படுகின்ற எந்த ஒரு சேவையும் திட்டமும் தக்க தருணத்தில் முறையாக சீரமைத்து பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டியது சம்பந்தப்பட்ட நிர்வாகத்தின் கடமையாகும். ஆனால் அலட்சியம் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுவது வேதனை அளிக்கிறது.

எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் உடுமலை மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நடைபாதையை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று பாதசாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...