மேட்டுப்பாளையத்தில் அத்துமீறும் தனியார் பேருந்துகள் - போக்குவரத்து நெரிசல்!

கோவை மேட்டுப்பாளையம் சாலை கவுன்டர்மில்ஸ் பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் அத்துமீறுவதாக புகார் எழுந்துள்ளது.


கோவை: மேட்டுப்பாளையம் சாலையில் அத்துமீறும் தனியார் பேருந்துகள் மீது் நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை எழுந்துள்ளது.

கோவை மேட்டுபாளையம் சாலை கவுன்டர்மில்ஸ் பகுதியில் மேம்பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அந்த சாலையில் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, நீண்ட வரிசையில் நின்று வாகனங்கள் செல்கிறது.



இந்நிலையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வரும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் விதியை மீறி ஒரு வழிச் சாலையில் பேருந்தை வேகமாக இயக்குவதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.



ஆம்புலன்ஸ் வாகனம் கூட சரியான பாதையில் செல்லும் நிலையில் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் அத்துமீறி வருகின்றனர். உடனடியாக சாலை விதி மீறலில் ஈடுபட்ட தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...

அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 10ஆம் தேதி 48.07 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள பரம்பிக்குளம், சோலையாறு மற்றும் ஆழியார் அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியா...