பல்லடம் அருகே ஸ்கேட்டிங் மைதானம் திறப்பு - மாணவர்கள் உற்சாகம்!

திருப்பூர் மாவட்டத்திலேயே முதல் முறையாக பல்லடம் அருகே ஊஞ்சபாளையத்தில் "வெலாசிட்டி ஸ்கேட்டிங் காம்ப்ளக்ஸ்" என்ற சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்கேட்டிங் விளையாட்டு மைதானத்தை மங்கலம் மற்றும் பல்லடம் பகுதி காவல்துறை அதிகாரிகள் பங்கேற்று திறந்து வைத்தனர்.


திருப்பூர்: பல்லடம் அருகே சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்கேட்டிங் விளையாட்டு மைதானம் இன்று திறக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஊஞ்சபாளையத்தில் "வெலாசிட்டி ஸ்கேட்டிங் காம்ப்ளக்ஸ்" என்ற சர்வதேச தரத்தில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள ஸ்கேட்டிங் விளையாட்டு மைதானம் இன்று திறக்கப்பட்டது.



மங்கலம் காவல் ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன், பல்லடம் காவல் துணை ஆய்வாளர் ராஜன், திருப்பூர் மாவட்ட ஸ்கேட்டிங் சங்கத்தின் செயலாளர் தங்கதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்கேட்டிங் மைதானத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.



மேலும் ஸ்கேட்டிங் பயிற்சி பெற்று வரும் மாணவர்களின் ஸ்கேட்டிங் அணி வகுப்பினை துணை காவல் ஆய்வாளர் ராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக திறக்கப்பட்ட ஸ்கேட்டிங் மைதானத்தில் கால்களில் சக்கரத்தை கட்டிக்கொண்டு சுற்றி வந்தனர்.



இது குறித்து வெலாசிட்டி ஸ்கேட்டிங் காம்ப்ளக்ஸ் இன் நிறுவனர் காமராஜ் பேசியதாவது, திருப்பூர் மாவட்டத்தில் முதல் முறையாக பல்லடம் அருகே ஊஞ்ச பாளையத்தில் சர்வதேச தரத்தில் இந்த ஸ்கேட்டிங் மைதானம் திறக்கப்பட்டு உள்ளது.

இதுபோன்று திருப்பூர் மாவட்டம் முழுக்க மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஸ்கேட்டிங் பயிற்சி மைதானங்கள் திறக்கப்பட வேண்டும். மாநில அளவிலான போட்டிகளிலும், தேசிய அளவிலான போட்டிகளிலும் பல்லடம் பகுதிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் ஸ்கேட்டிங் விளையாட்டில் பல்வேறு சாதனைகளை புரிய இந்த மைதானம் உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...