ரமலான் பெருநாளை ஒட்டி துடியலூரில் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் சார்பில் சிறப்பு தொழுகை!

ரமலான் பெருநாளை ஒட்டி கோவை துடியலூர் ஹிதாயத்துள் முஸ்லிமின் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக வடமதுரை எஸ்.எஸ்.கமலேஷ் திருமண மண்டபத்தில் திடல் தொழுகை நடைபெற்றது. இதில், 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டனர்.



கோவை: ரமலான் பெருநாளை ஒட்டி கோவை துடியலூரில் உள்ள சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் முக்கியத்துவம் வாய்ந்த ரமலான் பெருநாள் ரமலான் மாதம் 30 நாட்கள் நோன்பு வைத்து இன்றைய தினம் ஷவ்வால் பிறை 1 ல் கொண்டாடப்படும். இந்த பெருநாளானது ஒட்டுமொத்த இஸ்லாமியர்களுக்கும் ஓர் சிறந்த பண்டிகை ஆகும்.



ஈதுல் பித்ரு தொழுகை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடி வரும் சூழலில், கோவை மாவட்டம் துடியலூர் ஹிதாயத்துள் முஸ்லிமின் சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் சார்பாக வடமதுரை எஸ்.எஸ். கமலேஷ் திருமண மண்டபத்தில் திடல் தொழுகை ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.



இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களும், குழந்தைகளும் என சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் தொழுகையில் கலந்து கொண்டனர்.



துடியலூர் பள்ளிவாசல் செயலாளர் அமீர் அப்பாஸ் தலைமையில் நடைபெற்ற இந்த தொழுகைக்கு இமாம் சாஹிர் ஜைனி தொழுகவைத்து சிறப்புரை ஆற்றினார். மேலும் இமாமிற்கு பள்ளிவாசல் தலைவர் சுல்தான் மைதீன் நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.

நிகழ்ச்சி ஏற்பாடுகள் பொருளாளர் கனி மேற்பார்வையில் நடைபெற்றது.



மேலும் நிர்வாக குழு உறுப்பினர்கள் சுற்று வட்டார பகுதி இஸ்லாமியர்கள் மார்க்க அறிஞர்கள் என அனைவரும் கலந்து கொண்டு தங்கள் தொழுகையை நிறைவேற்றி அதன் பின்னர் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துக்களை கட்டி அணைத்து பரிமாறிக் கொண்டனர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...