கோவையில் மருமகளை தாக்கிய மாமனார், மாமியார் மீது வழக்கு!

பொள்ளாச்சி வடக்குத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மோகனப்ரியா(33). கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். சான்றிதழ் எடுக்க கணவர் வீட்டிற்கு வந்த மோகன பிரியாவை மாமனார், மாமியார் தாக்கியதால் இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கோவை: மகாலிங்கபுரத்தில் மருமகளை தாக்கிய மாமனார், மாமியார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மோகன பிரியா (33). இவர் கோவை வெள்ளலூர் மகாலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரை கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

கணவன் மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆறு மாதங்களாக மோகனப்பிரியா கணவரை பிரிந்து பொள்ளாச்சியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் வெள்ளலூர் பகுதியில் உள்ள தனது கணவரது வீட்டில் உள்ள கல்லூரி படிப்பு சான்றிதழ்களை எடுக்க நேற்று மோகன பிரியா வெள்ளலூர் வந்துள்ளார். அப்போது வீட்டிலிருந்த மோகனபிரியாவின் மாமனார் மாதையன் (68), மாமியார் விஜயலட்சுமி ஆகியோர் மோகனப்பிரியாவை தகாத வார்த்தைகளால், பேசியதோடு அவரை தாக்கியுள்ளனர்.

இதில் முகத்தில் காயமடைந்த மோகனப்பிரியாவை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மோகனப்பிரியா போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் மாமனார் மாதையன் மற்றும் மாமியார் விஜயலட்சுமி மீது போத்தனூர் போலீசார் பெண் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

உண்டியல் முறைகேடு புகார்: கோவை கோனியம்மன் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

கோவை கோனியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை கோவை மண்டல இணை ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் கோயிலில் திடீர் ஆய்வு மேற்க...

கவுண்டம்பாளையத்தில் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் பராமரிப்பு: மாநகராட்சி ஆணையர் களஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, மேற்கு மண்டல கவுண்டம்பாளையம் பகுதி மேல்நிலை நீர்த்தேக்கம் மற்றும் மத்திய...

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு செப்டம்பர் 2026 வரை நடைபெறும்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் விவரங்களை சேகரிக்கும் சமூக தர...

36 ஆண்டுகளுக்கு பின் சந்திப்பு: ஆசிரியர்களுக்காக நாற்காலிகள் வழங்கிய அசோகபுரம் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள்

கோவை துடியலூர் அருகே உள்ள அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியின் 1991–92 கல்வியாண்டு முன்னாள் மாணவர்கள், 36 ஆண்டுகளுக்குப்...

கோவை மேற்கு மண்டலத்தில் சாலை, பாதாள சாக்கடை பணிகளை மாநகராட்சி மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் மறுசீரமைப்பு பணிகள...

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....