லஞ்சம் கொடுக்காத விவசாயிகள் மீது பொய்வழக்கு - உடுமலை குறைதீர்க் கூட்டத்தில் புகார்

உடுமலையில் லஞ்சம் கொடுக்க மறுத்தால், விவசாயிகள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாக கோட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மைவாடி கிளை கால்வாய் மூலம் பாசன வசதி பெற்றுவரும் விவசாயி நடராஜ்மீது, வேண்டுமென்றே பாசன சபை தலைவர் செல்லமுத்து, உடுமலை கால்வாய் உதவி செயற்பொறியாளர் விஜய் சேகரன் ஆகியோர் தண்ணீர் எடுத்ததுபோல் புகைப்படம் எடுத்து இருபதாயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகின்றது.



இந்நிலையில், லஞ்சப் பணம் கொடுக்காத நிலையில் தற்போது விவசாய நடராஜ் உட்பட நான்கு பேர் மீது பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு புகார் தெரிவிக்கப்பட்டது. இதனால், சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்தார்.



மேலும் விவசாயிகள் குறைதீர்க் கூட்டத்தில் விவசாயிகள் மாதம் தோறும் கொடுக்கும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை, முக்கிய அதிகாரிகள் யாரும் குறைதீர் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை, சில வாரங்களாக விளை நிலங்களை காட்டு யானைகள் மற்றும் காட்டுப் பன்றிகள் தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது, விவசாயிகள் பலமுறை சம்பந்தப்பட்ட வனத்துறையிடம் தகவல் தெரிவித்தாலும் எதையும் கண்டு கொள்வதில்லை, உடுமலை பகுதியிலிருந்து சட்ட விரோதமாக கேரளாவுக்கு அதிக அளவு கனிம வளங்கள் திருடப்பட்டு வருவதால் உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல பிரச்சனைககளை குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...