வால்பாறையில் சிறுத்தை தாக்குதலுக்கு ஆளான வடமாநில தொழிலாளி- வனத்துறை சார்பில் நிதியுதவி

கோவை மாவட்டம் வால்பாறையில் சிறுத்தை தாக்கி காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் வடமாநில தொழிலாளி சீத்தாமுனி குமாரி என்ற பெண்ணிற்கு உடனடி நிவாரணமாக ரூ.2 ஆயிரத்தை வனத்துறை சார்பில் நிதி உதவி அளிக்கப்பட்டது.


கோவை: கோவை வால்பாறை அருகே சிறுகுன்றா எஸ்டேட் பகுதியில் நேற்று வட மாநில பெண் தொழிலாளி சீத்தாமுனி குமாரி என்பவரை சிறுத்தை தாக்கியது.

அதில் கை கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.



சிறுத்தை தாக்குதலுக்கு உள்ளான அந்தப் பெண்ணை, வால்பாறை நகராட்சி நகர மன்ற தலைவர் அழகுசுந்தரவள்ளி செல்வம் மருத்துவமனையில் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது, 17வது வார்டு உறுப்பினர் மணிகண்டன்,12 வார்டு உறுப்பினர் அன்பரசன் முன்னாள் வார்டு உறுப்பினர் செல்வம் ஆகியோர்கள் உடன் இருந்தனர்.



இதனிடையே, வால்பாறை வன சரகர் வெங்கடேஷ், சிறுத்தை தாக்கி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் வட மாநில தொழிலாளி சீத்தாமுனி குமாரியை நேரில் சந்தித்து, உடனடி நிவாரண நிதியாக ரூ.2000-யை வழங்கி, விரைவில் குணமடைய வாழ்த்துத் தெரிவித்தார்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...