கிருஷ்ணகிரி ஆணவக்கொலையை கண்டித்து திருப்பூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக தந்தையே மகனை கொலை செய்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து திருப்பூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: தந்தையே மகனை சாதி ஆணவக்கொலை செய்த சம்பவத்தை கண்டித்து, திருப்பூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் அருணாபதி கிராமத்தைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் மகன் சுபாஷ் சாதி மறுத்து வேறு சாதியை சேர்ந்த காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதற்கு சுபாஷின் தந்தை தண்டபாணி எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் சொந்த ஊர் சென்ற சுபாஷை அவரது தந்தை தண்டபாணி சரமாரியாக அரிவாளால் தாக்கியுள்ளார். உடன் வந்த அனுசுயாவையும் இதனை தடுத்த தண்டபாணியின் தாய் கண்ணம்மாவையும் தாக்கியுள்ளார்.

இதில் சம்பவ இடத்திலேயே சுபாஷ், கண்ணம்மா உயிரிழந்த நிலையில் படுகாயங்களுடன் அனுசுயா மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.



இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், தமிழகம் முழுவதும் சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வலியுறுத்தியும் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் தூய்மைப் பணிகள் - வார்டு கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் டெங்கு கொசு ஒழிப்பு, பூங்கா தூய்மை மற்றும் மர குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்ப...

ரூ.10.69 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் திறப்பு: கோவையில் புதிய விளையாட்டு அரங்குகள், பள்ளி வசதிகளை தொடங்கி வைத்த அமைச்சர் வே.சம்பத்குமார்

கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் ரூ.10.69 கோடி மதிப்பிலான பள்ளி கட்டிடங்கள், விளையாட்டு அரங்குகள், அங்கன்வாடி, மகள...

அமராவதி அணை நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஜூலை 25ஆம் தேதி நிலவரப்படி 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 25ஆம் தேதியின் நீர்மட்ட நில...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் விருது

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை ஞான சஞ்சீவனம் குருகுலம் இணைந்து நடத்திய புத்தக வெளியீட்டு...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் இரண்டாவது பொறுப்பேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி ரோட்டராக்ட் கிளப் கோவையில் இரண்டாவது பொறுப்பேற்பு விழாவை நடத்தியது. புதிய நிர்வாக...