உடுமலை அருகே காந்தலூரில் 'சுற்றுலா விழா 2023' தொடக்கம் - மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனத்துடன் கோலாகலம்

உடுமலை அருகே காந்தலூரில் மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்களுடன் சுற்றுலா விழா-2023 கோலாகலமாகத் தொடங்கியது. கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் இந்த விழா நடத்தப்படுகிறது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை தமிழக - கேரள எல்லைப் பகுதியில் உள்ள மறையூர் காந்தளூர் பகுதியில் ஏராளமான தமிழர்கள் அதிக அளவு வசித்து வருகின்றனர்.

மேலும், சுமார் 20க்கும் மேற்பட்ட மலைவாழ் குடியிருப்புகள் உள்ளன. காந்தலுார், மூணாறு, மறையூர், சின்னாறு ஆகியவை சுற்றுலா தலங்களாக உள்ளன. பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.

பசுமை சூழ்ந்த மலைகள், சந்தன மரக்காடு,வனப்பகுதி, பழங்கால பாறை ஓவியங்கள், சிற்பங்கள், முனியறைகள், ஆப்பிள் தோட்டங்கள், பூங்காக்கள் மற்றும் மர வீடுகள், சொகுசு ஓட்டல்கள் என, இப்பகுதிகளில், 52 சுற்றுலா இடங்கள் உள்ளன.

கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில், சுற்றுலா பயணியர் வருகையும் தற்போது அதிகரித்துள்ளது.



சுற்றுலா வளர்ச்சியை கருத்தில் கொண்டு, வனத்துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் 29ம் தேதி வரை காந்தலுார் சுற்றுலா விழா-2023 கொண்டாடப் படுகிறது.

இதற்கான துவக்க விழாவில் வனத்துறையினர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்றனர்.



மலைவாழ் மக்களின் பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சியுடன் இந்த விழா தொடங்கியது.



சுற்றுலா விழாவை முன்னிட்டு, வனப்பகுதியில் என்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது.



டிரக்கிங், கேம்ப் பயர், மலர் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், தமிழகம் மற்றும் கேரளாவின் பாரம்பரிய நடனங்கள் மற்றும் நாடகங்கள் நடத்தப்பட்டன. மேலும், சீதையுடன் ராமன் வசித்த பகுதியாக காந்தலூர் குறிப்பிடப்படுவதால், அனைத்து விடுதிகள், சுற்றிலும் உள்ள கிராமங்களில், சீதா ராமரை வணங்கும் வகையில், ராமர்வில் வடிவில் ஆயிரக்கணக்கான திருவிளக்குகள் மலைப்பகுதியில் ஏற்றப்பட்டுள்ளது.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...