கோவை அருகே சாலையில் சென்ற காரில் தீவிபத்து - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

கோவை மாவட்டம் சூலூர் அருகே அவிநாசி சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


கோவை: திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியை சேர்ந்த சரவணன் மற்றும் பசுபதி ஆகியோர் மருத்துவ தேவைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு காரில் கொண்டிருந்தனர்.



கணியூர் டோல்கேட் அருகே கார் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அதில் தீப்பிடித்தது. மளமளவென காரில் தீ பரவியதால் அதிர்ச்சியடைந்த இருவரும், காரை சாலையோரம் நிறுத்திவிட்டு உடனடியாக வெளியே வந்தனர்.



கார் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால், அப்பகுதியே புகை மூட்டமாக காட்சியளித்தது.



இது தொடர்பாக கிடைத்த தகவலின் பேரில் சூலூர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காரில் எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில், காரில் பயணம் செய்த இருவரும் பாதிப்புகளின்றி உயிர் தப்பினர்.

இதையடுத்து, கருமத்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சரவணன் மற்றும் பசுபதி கோவை செல்வதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்துகொடுத்தனர். காரில் தீபிடித்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...