வால்பாறையில் தேசிய மனித உரிமைகள் மன்றம் சார்பில் கருத்தரங்கு கூட்டம்

கோவை மாவட்டம் வால்பாறையில் தேசிய மனித உரிமைகள் மன்ற மாநில தலைவர் ராமச்சந்திரன் தலைமையில், மாநில அளவிலான கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தேசிய மனித உரிமைகள் மன்றத்தின் சார்பில் மாநில அளவிலான கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது மாநில தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார்.



வால்பாறை வட்டார தலைவர் குமார் வரவேற்றார், நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.



தேசிய மனித உரிமைகள் மன்றத்தின் தலைவர் கிரிஷ் குமார் கூறுகையில், மலைப்பகுதியில் மக்களுக்கு அடிப்படைத் தேவைகளை கண்டறிந்து நியாயமான பிரச்சனைகளுக்கான குரல் கொடுக்க வேண்டும். சேவை மனப்பான்மையோடு உதவி செய்யும் நோக்கத்தோடு சிறப்பாக பணியாற்ற வேண்டும்.



பொள்ளாச்சியை தனிமாவட்டமாக அரசு அறிவிக்க வேண்டும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச கூலியை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் என்று பேசினார். மேலும் கேரளா இடுக்கி மாவட்டத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த அரிசி கொம்பன் என்ற ஒற்றை யானையை கேரளா அரசு அப்பகுதியிலிருந்து பிடித்து பரம்பிக்குளம் வனப்பகுதிக்கு விட விடும்படி வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அந்த யானையை பரம்பிக்குளம் வனப்பகுதியில் விட்டால் வனப்பகுதிக்குள் வாழும் பழங்குடியின கிராமங்களில் வாழும் மக்களையும், மலுக்கப்பாறை எஸ்டேட் பகுதிகளிலும் வாழும் மக்களையும், அச்சுறுத்தும் என்று அந்த யானையை பரம்பிக்குளம் வனப்பகுதிக்குள் விட வேண்டாம் என்று தமிழக அரசிடம் தெரிவிக்கும்படி வால்பாறை நகராட்சி தலைவர் அழகு சுந்தரவல்லி செல்வத்திடம் மனு ஒன்றை வழங்கினார். அந்த மனுவை தமிழக அரசுக்கு தெரியப்படுத்துவோம் என்று நகராட்சி தலைவர் தெரிவித்தார்.

Newsletter

சோமையம்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால்...

கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

கோவை கருமத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இத...

சோமனூர் துணை மின் நிலையத்தில் நாளை (10.07.2026) மின்தடை

சோமனூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் சோ...

கரூரில் உயிரிழந்த 41 பேர் குடும்பங்களுக்கு அரசு பணி: "அரசு நெய்யில் ஸ்வீட் செய்யக் கூடாது" - டாக்டர் க. கிருஷ்ணசாமி

கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், அவர்கள் முக்கிய...

தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரியில் 2026-2027 கல்வியாண்டிற்கு உதவிப் பேராசிரியர் மற்றும் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்...

மாணவிகள் தொழில்முனைவோராக உருவாக வேண்டும் - கோவை அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில் "பெண்களும் தொழில்முனைவோர் துறை வாய்ப்புகளும்" என்ற தலைப்பி...