உடுமலை அருகே குடிமங்கலத்தில் கடும் குடிநீர் தட்டுப்பாடு - கிராம மக்கள் ஆட்சியரிடம் கோரிக்கை!

குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மூங்கில்தொழுவு, அனிக்கடவு, வாகத்தொழுவு, கொசவம்பாளையம் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக முறையான குடிநீர் விநியோகம் இல்லாத நிலையில், குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் மனுவை அளித்தனர்.


திருப்பூர்: உடுமலை அடுத்த குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க கோரி பொது மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்ற தொகுதி குடிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மூங்கில்தொழுவு, அனிக்கடவு, வாகத்தொழுவு, கொசவம்பாளையம் பகுதிகளை சேர்ந்த மக்கள், திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.



அந்த மனுவில் கூறியிருப்பதாவது,

எங்கள் பகுதியில் கடந்த 30 நாட்களுக்கு மேலாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரிய உதவி பொறியாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோரிடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

திருமூர்த்தி மலை கீழ்மட்ட தொட்டியில் மின் மோட்டாரை சரி செய்ய போதிய பணம் இல்லை என கூறிவிட்டனர். ஏற்கனவே ஆட்சியரிடம் முறையிட்டுள்ளோம். குடிநீர் தட்டுப்பாடு பிரச்சினையை சரி செய்து தரப்படும் என்று தெரிவித்தீர்கள். இன்றுவரை அரசு அதிகாரிகளிடம் இருந்து நடவடிக்கை இல்லை.

எனவே கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில், மேற்கண்ட ஊராட்சிகளில் உள்ள மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாட்டை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...

துடியலூரில் அதிரடி வாகனச் சோதனை: 10க்கும் மேற்பட்ட ஏர் ஹாரன்கள் பறிமுதல்

கோவை மேட்டுப்பாளையம் சாலை துடியலூர் பகுதியில் மாநகர காவல்துறை மற்றும் RTO அதிகாரிகள் இணைந்து நடத்திய அதிரடி வாகனச் சோதனை...