புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்க வாய்ப்பு - கோவை ஆட்சியர் அழைப்பு

கோவை மாவட்டத்தில் புதிய தொழிற் பயிற்சி நிலையங்கள் தொடங்க இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அழைப்பு விடுத்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்குவது குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்குதல், அரசு-தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழில் பிரிவுகள், கூடுதல் அலகுகள் தொடங்குதல் மற்றும் இடமாற்றம் செய்வதற்கு www.nimionlineadmission.in/iti என்ற இணையதளத்தில் வருகிற 25.04.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

அதன்படி, தொழிற்பயிற்சி நிலையங்கள் இல்லாத பஞ்சாயத்து யூனியன்களில் குறைந்தபட்சம் 4 தொழிற்பிரிவுகளுடன் புதிய தொழிற்பயிற்சி நிலையம் தொடங்க விண்ணப்பிக்கலாம்.

4 தொழிற்பிரிவுகளுக்கு குறைவாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் தொழிற்பயிற்சி நிலையங்கள், புதிய தொழிற்பிரிவுகள் தொடங்கிடவும் மற்றும் கூடுதல் அலகுகள் தொடங்கிடவும், தொழிற்பயிற்சி நிலையங்கள் இடமாற்றம் செய்யவும் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...

அமராவதி-திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணை நீர்மட்டம் ஜூலை 23ஆம் தேதி 50.43 அடியாக உயர்ந்துள்ளது. 90 அடி கொள்ளளவு கொண்ட அண...