கோவை மயிலேரிபாளையத்தில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு!

கோவை மயிலேரிபாளையம் ஊராட்சியில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. திமுக தெற்கு மாவட்ட தலைவர் தளபதி முருகேசன், மரக்கன்றுகளை நட்டு இந்த பணியை தொடக்கி வைத்தார்.


கோவை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின் 70 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் துவங்கியுள்ளது.



முதல்கட்டமாக மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் மயிலேரிபாளையம் ஊராட்சியில் சுமார் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. திமுக தெற்கு மாவட்ட தலைவர் தளபதி முருகேசன் இந்த பணிகளை மரக்கன்றுகளை நடவு செய்து துவங்கி வைத்தார்.



ஊராட்சி ஊழியர்கள், தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் இணைந்து வேப்பை, மாமரம், கொய்யா உள்ளிட்ட ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்தனர்.

இது குறித்து திமுக மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் கூறுகையில்,

கலைஞர் நூற்றாண்டு மற்றும் முதல்வர் 70 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகளை நடவு செய்ய உள்ளோம். இந்த மரக்கன்றுகளை அந்தந்த ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகத்தினர் வேலிகள் அமைத்தும், தண்ணீர் ஊற்றியும் பராமரிக்க உள்ளனர்.

மேலும் கோவை தெற்கு மாவட்டம் முழுவதும் மரக்கன்றுகளை அடுத்தடுத்து நடவு செய்யும் பணிகளை கட்சி நிர்வாகிகள், தன்னார்வலர்கள் மூலம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.



இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர் கே.கே.செந்தில்குமார், மயிலேரிபாளையம் ஊராட்சி தலைவர் கோமதி திருமூர்த்தி, ஊராட்சி செயலாளர் பி.திருமூர்த்தி, ஊராட்சி துணை தலைவர் என்.சுப்பிரமணியம், மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...