பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் திடீர் தர்ணா

பொள்ளாச்சி அருகே விவசாய நிலத்தில் கழிவு நீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் சார் ஆட்சியர் அலுவலகத்தில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாவட்டம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடந்தது.



இந்த கூட்டத்தில் பொள்ளாச்சியின் பல்வேறு பகுதியில் இருந்து விவசாயிகள் கலந்துகொண்டு குறைகளை சார் ஆட்சியர் பிரியாங்காவிடம் தெரிவித்தனர்.



பொள்ளாச்சி அடுத்த புளியம்பட்டி கிராமத்தை சுற்றி உள்ள பத்து கிராமங்களில் இருக்கும் மொத்த கழிவு நீரும் அருகில் இருக்கும் பல ஏக்கர் விளை நிலத்தில் தேங்கி நிற்பதால் கிணற்று நீர் மாசடைவதாகவும், கால்நடைகள் நோய்வாய்படுவதாகவும், அங்கு உள்ள தென்னை மரங்கள் பட்டுபோவதாகவும், அருகில் உள்ள கிராம மக்கள் வியாதிகளுக்கு உள்ளாவதாகவும் கூறி சார் ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.



அப்போது கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகள் திடீரென கூட்ட அரங்கில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நான்கு முறை விவசாய குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை எனவும் மழை காலம் துவங்கினால் மீண்டும் விளை நிலத்தில் கழிவு நீர் புகுந்து சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகும் எனவும் உடனே இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.



இதை விசாரித்த சார் ஆட்சியர் பிரியங்கா போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை குனியமுத்தூரில் ரோட்டரி மாவட்டம் 3206 புதிய ஆளுநராக ஆர்.எஸ்.மாருதி பொறுப்பேற்பு

கோவை குனியமுத்தூரில் உள்ள கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் ரோட்டரி மாவட்டம் 3206-க்கு R.S. மாருதி புதிய ஆளுநராக பதவியேற...

கோவையில் ஜூலை 10-ல் ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு; முன்னணி நிபுணர்கள் பங்கேற்பு

இந்திய தொழில் வர்த்தக சபை கோவை (ICCIC) சார்பில், ‘உழவே தலை 8.0’ வேளாண் கருத்தரங்கு ஜூலை 10-ஆம் தேதி கொடிசியா வளாகத்தில்...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மைப்பணியாளர்களுக்கு இலவச பன்நோக்கு மருத்துவ முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா உத்தரவின்படி, தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக...

வெள்ளலூர் குடியிருப்புகளில் குப்பைக் கிடங்கு புகார்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நேரில்...

கோவையில் சமூக நல்லிணக்க ஊராட்சி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவையில் சாதி பாகுபாடற்ற சமூக நல்லிணக்கத்தைக் கடைபிடிக்கும் ஊராட்சிகளுக்கு 1 கோடி ரூபாய் ஊக்கத்தொகையுடன் கூடிய விருது வழ...

கோவையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி செயலாக்க இயந்திர இயக்குபவர் பயிற்சி

கோவையில் தாட்கோ மற்றும் மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு நெகிழி...