கிணத்துக்கடவு அருகே பாறைக்குழியில் குதித்து 2 பேர் தற்கொலை!

கிணத்துக்கடவு அருகே ஏலூரில் உள்ள பாறைக்குழியில் ஆண், பெண் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. விசாரணையில், இருவரும் சாணிப்பவுடன் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஏலூரில் பாறை குழியில் அதிகளவில் தண்ணீர் தேங்கி உள்ளது.



இந்த பாறைக்குழியில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் உடல் தண்ணீரில் மிதப்பதாக அந்த பகுதி மக்கள் கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.



தகவல் அறிந்து வந்த கிணத்துக்கடவு போலீசார் உடனடியாக கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.



சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரில் இருந்து மிதந்து கிடந்த இரண்டு உடல்களையும் கயிறு கட்டி மீட்டனர்.



உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், இருவரும் சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த ஆணின் வயது 60 ஆகவும், பெண்ணின் வயது 50 வயது ஆகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...