வால்பாறை பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு நிதியுதவி

வால்பாறை அருகே வனப்பகுதியில் உள்ள 4 பழங்குடியினர் குடியிருப்புகளில் 89 வீடுகளுக்கு உறுதியான கூரை அமைப்பதற்கு, தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து(CSR) ரூ.14.86 லட்சத்திற்கான காசோலை, கோவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.


கோவை: வால்பாறை தாலுகாவில் உள்ள பழங்குடியினர் குடியிருப்புகளில் வீடுகள் கட்டுவதற்கு தனியார் நிறுவனங்கள் இணைந்து நிதி வழங்கின.

கோவை மாவட்டம், வால்பாறை தாலுகாவில் ஆழமான வனப்பகுதியில் உள்ள 4 பழங்குடியினர் குடியிருப்புகளில் உள்ள 89 வீடுகளுக்கு உறுதியான கூரை வீடுகள் அமைப்பதற்கு, தனியார் நிறுவனங்கள் தங்களது சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து(CSR)ரூ.14.86 லட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடியிடம் வழங்கின.



வால்கரோ இன்டர்நேஷனல் ப்ரைவேட் லிமிட் நிறுவனத்தின் சார்பில் 2.65லட்சம், ஹேமலதா அண்ணாமலை சார்பில் ரூ. 3.30 லட்சம், மெய்நிகர் மீட்புப் படை (VRF) சார்பில் 1.41 லட்சம், டாக்டர் விஜயா சார்பில் ரூ.7.5 இலட்சம் என மொத்தம் ரூ.14.86 லட்சம் வழங்கிய அனைவரையும் மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.

மேலும், இன்னும் மூன்று பழங்குடியின குடியேற்றங்களுக்கு இதுபோன்று கூரைகள் அமைக்க தனியார் நிறுவனங்கள் தங்களுடைய சி.எஸ்.ஆர் நிதியினை அளித்து உதவ முன்வரவேண்டும் என்று மாவட்ட ஆட்சியர், வேண்டுகோள் விடுத்தார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...