விவசாயிகளுக்கு மானிய விலையில் பேட்டரி ஸ்பிரேயர் - உடுமலை வேளாண்மைத்துறை அறிவிப்பு

உடுமலைபகுதி விவசாயிகளுக்கு மானிய விலையில் பேட்டரி ஸ்பிரேயர் மற்றும் வேளாண் கருவிகள் விற்பனைக்கு வந்துள்ளதாக உடுமலை வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது. தேவைப்படும் விவசாயிகள், ஆதார், சிட்டா, வங்கி பாஸ்புக் ஆகியவற்றின் நகல் மற்றும் புகைப்படத்துடன் வந்து வாங்கிச் செல்லலாம் எனவும் அறிவித்துள்ளது.


திருப்பூர்: உடுமலை மற்றும சுற்றுப்பகுதி விவசாயிகளுக்கான உடுமலை வேளாண்மை துறை சார்பில் செய்திக் குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில், திருப்பூர் மாவட்டம் உடுமலை வேளாண்மை உழவர் நலத்துறையில் பேட்டரி ஸ்பிரேயர் மானிய விலையில் விற்பனைக்கு உள்ளது. தேவைப்படும் விவசாயிகள் கம்ப்யூட்டர் சிட்டா, ஆதார் அட்டை நகல், பேங்க் பாஸ்புக் முன்பக்க நகல், போட்டோ ஓன்றுஆகிய ஆவணங்களை கொடுத்து வாங்கிக்கொள்ளலாம் என்றும், முழுவிலை-ரூ.4450 மானியம்-2000.

மேலும், கீழக்கண்ட விவசாய உபகரணங்கள் தொகுப்பு 50% மானிய விலையில் உள்ளது.

கடப்பாரை-1 ,

மண்வெட்டி-1

களைக்கொத்து-1,

கதிர்அருவாள் 1

மண்அள்ளும் சட்டி-1 ஆகிய பொருட்கள் மானியத்தில் உள்ளது.

தேவைப்படும விவசாயிகள், கம்ப்யூட்டர் சிட்டா, ஆதார் அட்டைநகல், பேங்க்பாஸ்புக் முன்பக்க நகல், போட்டோ-1 ஆகிய ஆவணங்களைக் கொடுத்து வாங்கி பயன்பெறவும். முழுவிலை-ரூ 3079 ஆகும். இது தொடர்பாக விவசாயிகள் உடுமலை வேளாண்மை அலுவலகத்தையும். உதவி வேளாண்மை அலுவலர் அமல்ராஜ் என்பவரை 9751293606 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...

கோவையில் நாளை முதல் கோமாரி தடுப்பூசி முகாம் தொடக்கம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 10 வரை கால் மற்றும் வாய் (கோமாரி) நோய் தடுப்பூசி முகாம் நடைபெறும். அனைத்த...

பொள்ளாச்சி MP கே.ஈஸ்வரசாமி கோவையில் ரூ.57 லட்சம் மதிப்பிலான நியாயவிலைக் கடைகள் மற்றும் அங்கன்வாடி மையம் திறப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஈஸ்வரசாமி, மேயர் கா....

பொள்ளாச்சி எம்.பி. மேம்பாடு நிதியில் ரூ.57 லட்சம் மதிப்பில் புதிய நியாயவிலைக் கடைகள், அங்கன்வாடி மையம் திறப்பு

கோவை மாநகராட்சியின் தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5...