கோவையில் பொது இடத்திலிருந்த 18 மரங்களை வெட்டிய நபர் மீது புகார்!

கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் பொது இடமான பூங்காவில் இருந்த 18 மரங்களை அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் வெட்டிய சம்பவம் தொடர்பாக காவல் நிலையம், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வனத்துறை உள்ளிட்ட அலுவலகங்களில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.



கோவை: கோவை மாவட்டம் ஜி.என்.மில்ஸ் அருகே பொது இடத்தில் இருந்த 18 மரங்களை வெட்டிய நபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.



ஜி.என்.மில்ஸ் அருகிலுள்ள சான்பிரிக்ஸ் என்ற தனியார் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு 25 தனித்தனி வீடுகள் உள்ளன.



மேலும் 50 சென்ட்டில் பார்க் அமைந்துள்ளது. இந்த பார்க்கில் 50க்கும் மேற்பட்ட மரங்கள் வளர்க்கப்பட்டு வந்தன.

இந்த பார்க்கில் பெரியவர்கள், பெண்கள் வாக்கிங் போகவும், குழந்தைகள் விளையாடவும் பயன்படுத்தி வருகின்றனர். ஏற்கனவே வெயில் காலம் என்பதால் இங்குள்ள மரங்கள் அங்குள்ளவர்களுக்கு இதமான சூழலை தருகின்றன.



இந்த நிலையில் அப்பகுதியில் குடியிருக்கும் பிரகாஷ் என்பவர் இன்று காலை பார்க்கிலுள்ள 18 மரங்களை திடீரென வெட்டியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்து அந்த பகுதி மக்கள் உடனடியாக கிராம நிர்வாக அலுவலர், காவல்துறையினர் மற்றும் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கொடுக்கும் புகாரை வைத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்வதாக கூறிவிட்டு சென்றுள்ளனர்.

சுமார் அரை மணி நேரத்தில் வெயில் காலத்தில் நிழல் தந்த 18 மரங்களை வெட்டிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சாலையோரத்தில் பாதி எரிந்த நிலையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம்...

விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புத் துண்டுடன் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தலையில் கருப்புத் துண்டு கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்தல் வாக்குறுதி...

வடவள்ளி பகுதி தூய்மைப் பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பாராட்டு

கோயம்புத்தூர் மேற்கு மண்டல வடவள்ளி பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை சிறப்பாக தரம் பிரித்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும...

புளியகுளம் மாநகராட்சி பள்ளிகளில் கோவை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் புளியகுளம் பகுதியில் உள்ள வெரினாடா உயர்நிலைப் பள்ளி மற்றும் ஆரம்பப் பள்ளியில் மேயர் கா.ரங...

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை (01.08.2026) மின்தடை

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை ஆகஸ்ட் 1ம் தேதி காலை 9 மணி முதல் மாலை...

திருப்பூர் மாவட்ட அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 28.54 அடியாகவும், திருமூர்த்தி அணை 35.44 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...