திருமூர்த்தி நகர் ஆசிரியர் பயிற்சி பள்ளி ஆசிரியருக்கு சிறந்த கல்வியாளர் விருது!

உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், முதுநிலை விரிவுரையாளராக பணியாற்றி வருபவர் விஜிலா. இவருக்கு மாவட்ட கல்வித்துறை சார்பில், சிறந்த கல்வியாளருக்கான சேவை விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது


திருப்பூர்: திருமூர்த்தி நகர் ஆசிரியர் பயிற்சி பள்ளி ஆசிரியருக்கு சிறந்த கல்வியாளர் சேவை விருது வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், முதுநிலை விரிவுரையாளராக பணியாற்றுபவர் விஜிலா. இவர், பல்வேறு பணியிடை பயிற்சிகளில், கருத்தாளராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டுள்ளார்.

ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கு ஆங்கில பாடத்துக்கான, கையேட்டினை வடிவமைத்துள்ளார். பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளார். இவரது பணிகளை பாராட்டி, திருப்பூர் மாவட்ட கல்வித்துறை சார்பில், சிறந்த கல்வி சேவையாளர் விருது வழங்கப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சியில், திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சங்கர், திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி ஆகியோர் தலைமை வகித்து விருது வழங்கினர்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான், முருங்கை மதிப்பூட்டப்பட்ட உணவுப் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்...

கோவை 27வது வார்டு பீளமேட்டில் அங்கன்வாடி முதல் வாய்க்கால் தூர்வாரல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால், பீளமேடு பகுதியில் அங்கன்வாடி மையம், மரக்கிளை அகற்றும...

பொள்ளாச்சி அருகே ஹோட்டல் உரிமையாளர் வீட்டு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பொள்ளாச்சி அருகே வேட்டைக்காரன்புதூரில் பிரபல ஹோட்டல் உரிமையாளரின் வீட்டு முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி தப்பிய...

அரசு பள்ளியில் தவெக கட்சி நிகழ்ச்சி ஒளிபரப்பு தவறான முன்னுதாரணம் - கோவையில் நயினார் நாகேந்திரன்

கரூர் மாவட்டத்தில் கோவில் நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து முழுமையான ஆய்வுக்குப் பிறகு, கோவில் சொத்துகளை...

கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர் நேர்மையால் குப்பையில் கிடந்த 1.1/2 சவரன் தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

கோவை மத்திய மண்டல வார்டு 68-ல் குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட தூய்மை பணியாளர் முருகன், குப்பையில் தவறுதலாக கிடந்த 1.1/...

கோவையில் கட்டுமான நிறுவனங்களுக்கு டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் கட்டாயம் - கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப. அறிவிப்பு: 100 வார்டுகளில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் மற்றும் தனியா...