கோவை ஆர்.எஸ்.எஸ்.பேரணியில் நிபந்தனை மீறல் - நிர்வாகிகள் 4 பேர் மீது வழக்கு

கோவையில் நடந்த ஆர்.எஸ்.எஸ் பேரணியில் உயர் நீதிமன்ற கூறிய நிபந்தனைகளை மீறியது, பொது இடத்தில் சிலம்பம் சுற்றி ஆயுதப் பயிற்சி எடுத்ததாக ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் 4 பேர் மீது இரண்டு 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


Coimbatore: தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணி நடத்தியது. அந்த வகையில் கோவையில் சத்ரபதி வீரசிவாஜியின் 350வது முடி சூட்டிய விழா, அம்பேத்கர் பிறந்தநாள் விழா, வள்ளலாரின் 200வது ஜெயந்தி விழா என முப்பெரும் விழாவாக நடத்தப்பட்ட பேரணியில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்று சீருடை அணிந்து ஊர்வலமாக சென்றனர்.



கோவை பொன்னையராஜபுரம் பகுதியில் துவங்கிய இந்த பேரணி, தியாகி குமரன் வீதி, இடையர் வீதி, தாமஸ் வீதி ஆகிய வீதிகளின் வழியாக வந்து ராஜவீதி தேர்முட்டி திடலில் நிறைவடைந்தது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற அளித்த விதிகளை மீறியதாகவும், பொது இடத்தில் சிலம்பம் சுற்றி ஆயுத பயிற்சி எடுத்ததாக கோவை வெரைட்டிஹால் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் விக்னேஷ் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் பசவலிங்கம் புகார் அளித்தார்.

இதன் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் சுகுமார், துணை தலைவர் குமார், செய்தி மக்கள் தொடர்பு நிர்வாகி விஜயகுமார், கோவை மாநக செயலாளர் முருகன் உள்ளிட்டோர் மீது 151, 341, 290 மற்றும் 153 (aa)ஆகிய 4 பிரிவுகளின் கீழ் போலீசார் இரண்டு வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

Newsletter

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...

அமராவதி அணையில் நீர்மட்டம் 38.98 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 40.46 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஜூலை 3 நிலவரப்படி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு ஆகியவற்றில் தென்மேற்கு பருவமழையால் நீர்வர...

வெள்ளப்பெருக்கு எதிரொலி: கோவை குற்றாலம் இன்று தற்காலிகமாக மூடல்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழையால் கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பொ...