கல்லூரியில் இருந்து என்னை யாரும் காதலிக்க வில்லை..! - கோவையில் நடிகர் விக்ரம் கலகலப்பான பேச்சு!

ஆதித்யா வர்மாவில் காதல் தோல்வியால் பாருக்கு போனான். இவன் காதல் தோல்வியால் வாருக்கு போனான். நான் ஒரிஜினல் சூப்(பர்) பாய், கல்லூரியில் இருந்தே தன்னை யாரும் காதலித்தது கிடையாது என்று கோவையில் நடந்த பிஎஸ்-2 புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் தெரிவித்தார்.


கோவை சரவணம்பட்டி ப்ரோசோன் தனியார் மாலில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் திரைப்பட இரண்டாம் பாகத்தின் விளம்பர நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய விக்ரம், மேடையில் அருள் படத்தின் பாடலை ரசிகர் மத்தியில் பாடி பேச்சை தொடங்கினார்.



அப்போது விக்ரம் பேசியதாவது:

நான் பேச நினைத்ததை எல்லாம் திரிஷா பேசிவிட்டார். ரசிகர்களை பார்த்து I LOVE YOU, நாங்கள் அனைவரும் உங்களை காதலிக்கிறோம். படங்களுக்கு படம் உடலை மாற்றிக் கொண்டே இருப்பேன். மஜா திரைப்பட சூட்டிங் பொள்ளாச்சியில் நடைபெற்றது, அப்போது ஜாலியாக இருந்தது.

சாப்பிட்ட சாப்பாடு இன்றுவரை உடம்பில் உள்ளது. நீங்கள் அழகாக தமிழ் பேசுகிறீர்கள். அந்நியன் திரைப்படத்தில் வரும் குரலில் பேசினதை நினைத்தாலே சிரிப்புதான் வருகிறது.

பொன்னியின் செல்வன் மிகப் பெரிய வெற்றியை அடைந்தது. இது எங்க படம் என்பதைத்தாண்டி, இது உங்க படம் என ஏற்றுக் கொண்டீர்கள். பிஎஸ் 2 படம் வெளியான பிறகு கோவையில் ஓடின அளவுக்கு வேறு எங்கும் ஓடவில்லை என கேள்விப்பட வேண்டும்.

இந்த படத்தின்போது தன்னுடன் நடித்த சக நடிகர்களுடன் அனைத்தையும் சந்தோசமாக பகிர்ந்து கொண்டோம். இந்த படம் ப்ரோமோஷனுக்காக செலவழித்த நேரம் அதிகம். இத்தனை நடிகர்கள்கூட நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. அனைத்து நடிகர்களும் இதில் ஒன்றாக இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

இவ்வாறு, விக்ரம் தெரிவித்தார். அப்போது, ரசிகர்கள் தங்கலான் திரைப்படம் குறித்து அப்டேட் கேட்டு முழக்கங்களை எழுப்பினர். அதற்கு பதில் அளித்த விக்ரம், அந்த திரைப்பட புரமோஷனின்போது அதனைப்பற்றி பேசி கொள்ளலாம் என்றும், அந்த சூட்டிங்கில் இருந்துதான் வந்துள்ளேன் என்றும் தெரிவித்தார். மேலும், படத்தின் இயக்குநர் ரஞ்சித் உங்களிடம் ஹாய் சொல்ல சொன்னதாகவும் ரசிகர்களிடம் விக்ரம் தெரிவித்தார்.

ஆதித்யா வர்மாவில் காதல் தோல்வியால் பாருக்கு போனான், இவன் காதல் தோல்வியால் வாருக்கு போனான், நான் ஒரிஜினல் சூப்(பர்) பாய், கல்லூரியில் இருந்தே தன்னை யாரும் காதலித்தது கிடையாது என்றும் நடிகர் விக்ரம் அப்போது கூறினார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...