பொள்ளாச்சியில் பலத்த பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ் பேரணி

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் சீருடை அணிந்தபடி 500க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்துகொண்டனர். ஆர்.எஸ்.எஸ் ரதம் மீது பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர்.


கோவை: பொள்ளாச்சியில் நடந்த ஆர்எஸ்எஸ் பேரணியில், தொண்டர்கள் வெள்ளைசட்டை, சீருடை அணிந்து பேண்ட் வாத்தியம் முழங்க பேரணியாக நடந்து வந்தனர்.

தமிழகத்தில் 45 இடங்களில் இன்று ஆர்.எஸ்.எஸ் சார்பில் பேரணி நடைபெற்றது.



அதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சியில் பல்லடம் சாலையில் ராஜேஸ்வரி மண்டபத்தில் தொடங்கிய ஆர்.எஸ்.எஸ். பேரணி பைவ் கார்னர், மகாலிங்கபுரம் ரவுண்டானா, கோவை சாலை வழியாக காந்தி சிலை வந்து அங்கிருந்து புதிய திட்டை சாலை வழியாக மீண்டும் ராஜேஸ்வரி மண்டபத்தை அடைந்தது.



இதில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் வெள்ளைசட்டை, சீருடை அணிந்து பேண்ட் வாத்தியம் முழங்க பேரணியாக கம்பிரமாக நடந்துவந்தனர்.



அப்போது, பேரணியுடன் வந்த ஆர்.எஸ்.எஸ் ரதம் மீது பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர்.



இந்த பேரணியில் மதுக்கரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை ஆகிய பகுதிகளில் இருந்து வந்த 500-க்கும் மேற்பட்ட ஆர் எஸ்எஸ் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.



இந்தப் பேரணியையொட்டி, கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் 450-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் DVAC சோதனை; கணக்கில் வராத ₹12,200 பறிமுதல்

தமிழகம் முழுவதும் நடைபெற்ற ஒருங்கிணைந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் ஒரு பகுதியாக, கோவை மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்...

கோவை மாநகராட்சியில் வரன்முறைப்படுத்தப்படாத மனைகளுக்கு ஜூலை 15 முதல் 18 வரை சிறப்பு முகாம்

கோயம்புத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளில் உள்ள வரன்முறைப்படுத்தப்படாத தனிப்பட்ட மனைகள் மற்றும் லேஅவுட்களை ஒழுங்குபடுத்த ஜ...

கோவை 27வது வார்டில் புதிய ஏ.இ. அலுவலகம், சாக்கடை சீரமைப்பு மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் ஜூலை 3-ஆம் தேதி பீளமேடு பாரதி காலனியில் புதிய வார்டு ஏ.இ. அலுவலக கட்...

கோவையில் சமூக நீதி விடுதி மாணவர்களுக்கான WhatsApp புகார் எண் அறிமுகம்

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், சமூக நீதி விடுதிகளில் தங்கும் மாணவர்கள் தங்கள் புகார்களையும் பாதுகாப்பு குறைபாடுகளையும்...

சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு 39-ல் உள்ள சிறுவாணி சாலையில் குப்பை கொட்டிய தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராத...

கோவையில் புதிய கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழு: உரிமையாளருக்கு ₹50,000 அபராதம்

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் வார்டு எண் 8, காளப்பட்டி பிரதான சாலையில் கட்டப்படும் புதிய கட்டிடத்தில் சுகாதாரத் துறையி...