உடுமலை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரசார் - போலீசார் தடுத்ததால் பரபரப்பு!

ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து உடுமலை ரயில் நிலையத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட முயன்ற நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், தடுப்புகள் அமைத்து போராட்டக்காரர்களை தடுக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்பை கண்டித்து உடுமலை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடியின் குடும்ப பெயர் குறித்து அவதூறு கருத்துகளை பரப்பியதாக பாஜக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல்காந்திக்கு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டது.



இதற்கு கண்டனம் தெரிவித்து 100 க்கும் மேற்பட்ட காங்கிரஸார் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.



நகராட்சி பூங்காவில் இருந்து ஊர்வலமாக வந்த காங்கிரஸ் கட்சியினர், ரயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர்.



அப்போது, அவர்களை உள்ளே விடாமல் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



பின்னர் மத்திய அரசை கண்டித்து அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து ரயில் நிலையத்தை முற்றுகையிட வந்த அனைவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த முற்றுகைப் போராட்டத்தில் கே .தென்னரசு மாவட்டத் தலைவர், கோவிந்தராஜ், ஜனார்த்தனன், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக துறை மாநில செயலாளர் டாக்டர் எஸ்.ஆர்.எஸ் இப்ராஹிம், மாநில பொது குழு உறுப்பினர் பி.கிட்டு சாமி, கே.கண்ணுசாமி, ஆர் முருகானந்தம், நகரத் தலைவர் கோ. ரவி,துணைத் தலைவர் ஆர் முத்துக்குமார், வட்டார தலைவர்கள் கனகராஜன், ஏ எஸ் வெங்கடேஷ்,பி. செல்லகுமார் மாவட்ட பொதுச் செயலாளர் சின்னச்சாமி, குடந்தை கண்ணன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...

கோவை ரேசன் கடைகளில் நாளை சிறப்பு முகாம்: கைவிரல் ரேகை பதிவுக்கு மீண்டும் வாய்ப்பு

கோவை மாவட்டத்தில் ஆகஸ்ட் 2-ல் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேக...

சிங்காநல்லூரில் செங்கல் தாக்குதல்: 52 வயது கட்டுமானத் தொழிலாளி பலி, சிறுவன் கைது

கோவை சிங்காநல்லூரில் சிறிய தகராறு பெரும் சோகமாக மாறியது. 52 வயதான கட்டுமானத் தொழிலாளி மணிகண்டனை 17 வயது சிறுவன் செங்கல்ல...

கோவை கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய மரபு கலாச்சார கண்காட்சி 2026

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் இந்திய அறிவுசார் மரபு கண்காட்சி நடைபெற்றது. கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர...

பிச்சை எடுக்க குழந்தைகளை வற்புறுத்திய மகாராஷ்டிரா சகோதரர்கள் கைது - செல்வபுரம் போலீசார் நடவடிக்கை

கோவை செல்வபுரத்தில் பேனா விற்பதாக நாடகமாடி சொந்த தம்பி தங்கைகளை பிச்சை எடுக்க வைத்த மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இரு...

கோவையில் ₹2.65 கோடி மதிப்பீட்டிலான மழைநீர் வடிகால் பணி மற்றும் மூங்கில் பூங்கா திறப்பு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், கோவை மாநகராட்சியின் மத்திய மண்டலத்தில் மழைநீர் வடிகால் கட்டுதல் ப...